You Are Here: Home » Happenings » ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா….’ — பாலிவுட்டே வியக்கும் இயக்குனர் பால்கி கூறும் பன்ச்!
பாலிவுட்டே வியப்பு கலந்த மரியாதையுடன் பார்க்கும் இயக்குனர்களில் ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கியும் ஒருவர். தமிழரான இவர் அமிதாப்பை வைத்து ‘பா’ மற்றும் ‘சீனி கம்’ ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார். (D 40 நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பி. சூப்பர் ஸ்டாரிடம் கூட ‘சீனி கம்’ போன்ற படங்களில் நீ நடிப்பதை பார்க்கவேண்டும் என்ற ஆசையாயிருக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.).
பால்கி சினிமா இயக்குனர் மட்டுமல்ல, பிரபல விளம்பர நிறுவனமான லிண்டாசின் சேர்மன் மற்றும் சீப் கிரியேட்டிவ் ஆபீசரும் ஆவார். இவரிடம் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. தீவிர ரஜினி ரசிகர் இந்த பால்கி.
அது பற்றி அவர் குங்குமம் வார இதழில் பால்கி கூறுகையில் : “ரஜினி சாரின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் அளவு கிரேஸ் உண்டு. மிகப் பெரிய பட்ஜெட்டில் ‘எந்திரன்’ போல ஒரு படம் எடுக்க ரொம்ப துணிச்சல் வேண்டும். ஷங்கர் பிராமதப்படுத்தியிருந்தார். இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட படம் ‘எந்திரன்’ தான். இந்திய சினிமாவுக்கு உலக அளவில் மகுடம் சூட்டிய படம். சென்ற ஆண்டு வெளியான படங்களில் விருதுக்கு தகுதியான படங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் நானும் இருக்கிறேன். ‘ஒரு வேளை இந்த படம் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றால் எல்லா விருதுகளையும் இந்தப் படத்துக்கே தரவேண்டியிருக்கும்’ என்று சக நடுவர்களிடம் கூறினேன்.” என்கிறார் பால்கி. இது எப்படி இருக்கு !?
…………………………………………………………………………
நண்பர்களே, எந்திரன் தேசிய விருதுகளை இந்த முறை அள்ளும் என்று தான் நினைக்கிறேன். சூப்பர் ஸ்டாரும் தனது குருநாதரின் கனவை இதன் மூலம் நனவாக்குவார் என்று நம்பலாம். உங்களில் சிலருக்கு உள்ளது போல ஆரம்பத்துல இருந்தே எந்திரன் தலைவருக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று ஒரு உள்ளுணர்வு இருந்து வந்தது. பால்கியின் பேட்டி அதை உறுதி படுத்துகிறது. எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நல்லதே நடக்கும்.
…………………………………………………………………………
[END]








டியர் சுந்தர் நல்ல இருக்கிங்களா.உடனுக்குடன் மேட்டர் அப்டேட் superb.
——————————————————-
நல்லாயிருக்கேன். நன்றி.
"எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அதை உணர வைத்த பெருமை எம் தலைவனுக்கே."
- சுந்தர்
அட்டகாசமான பதிவு. உங்கள் வாயில் சக்கரை அள்ளி கொட்ட வேண்டும். நம் தலைவருக்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
//எந்திரன்
தலைவருக்கு தேசிய
விருதை பெற்றுத் தரும//
-
தேசிய விருதுக்கும் பெருமை கிடைக்கட்டும்.
நல்ல விஷயம் சொன்ன சுந்தர்ஜி' க்கு சர்க்கரை வாயில் போடணும். தலைவருக்காக நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்.
தலைவர் நிச்சயம் தேசிய விருது பெறுவார் ..
ரஜினிகணேஷ்
கோபி ரஜினி ரசிகர்கள் …
inda varudam namma sundarjiku virudhu vazangum vizha updatesku panjamey irukadu.matravargal pala varudatirku oru murai vaangi serta virudugalai thalaivar orey varudatil kuvika vendum endru ellam valla iraivanai prartipom.
ella pugazhum nam thalaivarukkey.
தலைவர் கையில் தேசிய விருது. நினைத்து பார்ப்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. கண்டிப்பாக எந்திரனுக்காக தலைவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி ஒன்று நடந்தால் உண்மையாக முதலில் சந்தோசப்படுபவர் தலைவரின் குருநாதர் கே.பி சாராகத்தான் இருக்கும்.
-
நம் கடவுளுக்காக அந்த கடவுளிடம் வேண்டுவோம்.
Wow Great…….Thanks for the Updates Sundarji…!!!!
As Mrs Krishnan has commented the honour goes to award itself as it is being given to one & only SUPERSTAR……!!!!
இன்ஷா அல்லா , இந்த வருடத்தின் அனைத்து விருதுகளையும் பெறப்போகும் எந்திரன் டீமுக்கும் மற்றும் எனது தங்கத்தலைவ(ன்)ர் ரஜினி சார் அவர்களுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்
எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நல்லதே நடக்கும்.//
+1
நம்ம "எந்திரன்" படத்தோட கிராபிக்ஸ் வேலைகளை கச்சிதமாக செஞ்சு தந்து இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த "இந்தியன் ஆர்டிஸ்ட் " (சென்னை) -நிறுவனத்தின் CEO ஸ்ரீனிவாசன் மோகன் (Visual Effects Supervisor) அவர்களோட இந்த லிங்க்-ஐ பாருங்க….
——-***
http://srinivasmohan.wordpress.com/category/showc…
——-***
நம்ம தலைவர் கையில ஆஸ்கார் விருது வச்சிருக்கிற ஸ்டில்-சை பார்க்கும் போதே இவ்வளவு சந்தோசம்…….நிஜமா நடந்தா……நடக்கும்…கண்டிப்பாக நடக்கும்…..
—–
தலைவா……சீக்கிரமே ஆஸ்கார் விருதுக்கும் பெருமை வாங்கித் தாங்க………
–
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
சூப்பர் அப்டேட் அண்ணா! தலைவருக்கு எப்பவோ தேசிய விருது கிடைச்சிருக்கணும். என்ன பண்றது…? நம்ம ஆளுங்க எப்பவுமே லேட்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரசிகன் என்ற கர்வத்துடன்,
சாதிக் (மதுரை)
——————————————-
என்னப்பா இது ஆளாளுக்கு அண்ணா… அண்ணான்னு கூப்பிட்டுகிட்டு. எனக்கு அப்படியொண்ணும் வயசாயிடலே. பேசாம தம்பின்னு கூப்பிடுங்க. உண்மையான அண்ணன், பெரியண்ணன் ஹரி தான்.
- சுந்தர்
The Rajinikanth award goes to
-
-
-
-
-
OSCAR……..
:)
தேசிய விருது – கிடைக்கணும் ,பாக்கலாம் …எல்லாம் நன்மைக்கே
தலைவருக்கு நிச்சியம் தேசிய விருது எந்திரன் படத்தால் கிடைக்கும்னு எங்க ஏரியா ரசிக நண்பர்களிடம் சவால் விட்டுள்ளேன், தலைவர் இருக்க பயமேன், சவாலில் வெற்றி பெறுவோம்………
நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்………
பதிவுக்கு நன்றி சுந்தர்ஜி………
வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !
@ SADIQUE
நன்றி பிரதர். பாடலை பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்.
-
@ Vignesh
Super comment
@சுந்தர் sir : //என்னப்பா இது ஆளாளுக்கு அண்ணா… அண்ணான்னு கூப்பிட்டுகிட்டு. எனக்கு அப்படியொண்ணும் வயசாயிடலே. பேசாம தம்பின்னு கூப்பிடுங்க. உண்மையான அண்ணன், பெரியண்ணன் ஹரி தான்.//
அண்ணா… அண்ணா… அண்ணா… இது உங்க வயச வெச்சு கூப்புடுறது கிடையாது அண்ணா ….!
உங்களுக்கு ஆச்சேபனை இல்லைனா உங்கள "சின்னணா " என்றும், ஹரி அவர்களை "பெரியண்ணா" என்றும் கூப்பிடலாமா…???? இல்லாட்டி எம்.ஜி.ஆர்., காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்'னு கூட கூப்பிடறோம்! (உங்களுக்குதான் 'அண்ணா' பிடிக்காதுல) ஹி ஹி ஹி
***சாதிக் (மதுரை)***
@Mrs.Krishnan: Thanks !
சாதிக் (மதுரை)
/பேசாம
தம்பின்னு கூப்பிடுங்க/
-
@ Sundar anna.
'பேசாம' என்னைக்கு தம்பின்னு கூப்பிட முடியுதோ அன்னைக்கு நான் கண்டிப்பா உங்களை தம்பின்னு கூப்பிடறேண்ணா.
வாழ்க தலைவர்!
***என்னப்பா இது ஆளாளுக்கு அண்ணா… அண்ணான்னு கூப்பிட்டுகிட்டு. எனக்கு அப்படியொண்ணும் வயசாயிடலே. பேசாம தம்பின்னு கூப்பிடுங்க. உண்மையான அண்ணன், பெரியண்ணன் ஹரி தான்.****
ஆம் ஆம்!!! பெரிய அண்ணன் ஹரி தான்… அவர் கொஞ்ச நாளாக கம்மேன்ட்சில் பார்க்க முடியவில்லை!!! பாவம் தன்னுடைய பிள்ளைகளுக்கு பள்ளி படிப்பு சொல்லி கொடுக்கவே நேரம் செரியாக இருக்கிறது!!!
ரொம்ப நன்றி பால்கி. நீங்கள் சொன்னது போல் நடுவர்கள் உங்களோடு சேர்ந்து நியாப்படி நடந்துகொண்டால் நிச்சயம் ரஜினிக்கு என்திரன் சிறந்த நடிகராக தேசிய விருது பெரும். உலக சினிமா அரங்கில் ரஜினி ரசிகர்களை தலை நிமிர செய்யும். நன்றி
பால்கி அவர்களுக்கு அட்வான்ஸ் நன்றி..
தலைவர் அவர்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்க வாழ்த்துக்கள்..
ஆனால் தலைவர் இந்த படத்தை காட்டிலும் மிகச் சிறப்பாக நடித்த படங்கள் பல உள்ளன என்பது என் தாழ்ந்த கருத்து!!!!!!!!!!!!
பார்க்கலாம்..
"ஆண்டவன் அருளோடு நமக்கு அந்த பாக்கியம் கிடைத்தால் நன்றாக இருக்கும்" – நேஷனல் அவார்ட்
சீரஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில்,
பா. கண்ணன்.